Categories
journalist

சென்னை புழல் ஏரி முழு கொள்ளளவை நெருங்கியதால் நீர் திறப்பு – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

புழல் ஏரி தனது முழு கொள்ளளவை நெருங்கியதால் உபரி நீர் திறக்கப்படவுள்ளது.

சென்னை அடுத்த புழல் ஏரியில் இருந்து காலை 11 மணிக்கு உபரி நீர் திறக்கவுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கனமழையின் காரணமாக புழல் ஏரி தனது முழு கொள்ளளவை நெருங்கியதால் ஏரியின் பாதுகாப்பை கருதி வினாடிக்கு 500 கன அடி வீதம் இன்று காலை 11 மணி அளவில் பொதுப்பணித்துறையினர் திறந்துவிட உள்ளனர். சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளுள் பிரதானமானது புழல் ஏரி .ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் வினாடிக்கு ஆயிரத்து 487 கன அடி நீர்வரத்து ஏரிக்கு வர பெற்று வேகமாக நிரம்பி வருகிறது மொத்த கொள்ளளவு 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடியில் தற்போது 2872 மில்லியன் கன அடி கொள்ளளவு நீர் இருப்பு உள்ளது .

புழல்ஏரியின் மொத்த உயரம் 21.20 அடி. ஏரியின் தற்போது நீர்மட்டம் 19.30 அடியை எட்டி நிரம்பி உள்ளது. இதனால் ஏரியின் பாதுகாப்பை கருதி இன்று 11 மணி அளவில் வினாடிக்கு 500 கன அடி வீதம் மதகுகளில் உபரி நீர் வெளியேற்றப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறையினர் செய்துள்ளனர். உபரி நீர் வெளியேறும் பகுதிகளான காவாங்கரை பாயசம்பாக்கம் சாமியார் மடம் முல்லை வாயில் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வருவாய்த்துறையினர் சமுதாய கூடங்களையும் தனியார் மண்டபங்களையும் தயார் நிலையில் வைத்துள்ளனர்

Sathya Stalin's avatar

By Sathya Stalin

Sathiya Kumar is an enthusiastic freelance journalist who loves to talk about politics and frequently expresses his views. He is obsessed with football, traveling and likes to hang out with friends. Connect with him on Twitter https://twitter.com/amul_satya

One reply on “சென்னை புழல் ஏரி முழு கொள்ளளவை நெருங்கியதால் நீர் திறப்பு – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை”

Leave a reply to A.MONISH.EEE., Cancel reply

Design a site like this with WordPress.com
Get started