Categories
Uncategorized

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: பிப்ரவரி 19ல் வாக்குப்பதிவு, 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சென்னை அரும்பாக்கம் அலுவலகத்தில் தேர்தல் அட்டவணையை ஆணையர் பழனிக்குமார் வெளியிட்டார். வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும் எனவும் பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பொதுத் தேர்தல்களை நடத்தும் பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக இறங்கியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொரோனா பாதுகாப்பு விதிகளை கடைபிடிப்பது குறித்து மாநில தேர்தல் ஆணையம் கடந்த டிசம்பர் மாதம் சுற்றறிக்கை வெளியிட்டது.

இதனை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பெண்கள் மற்றும் பட்டியலினத்தவர்களுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தேர்தலை சந்திக்கும் வகையில் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களை சுமூகமாக நடத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் கடந்த புதன்கிழமை ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். மேலும் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

தேர்தலின் போது வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க செல்வர் என்பதால், வேட்பாளர்கள் மட்டுமல்ல வாக்களிப்பவர்களும், வாக்களிக்காதவர்களும் பாதிக்கப்படுவர் என்றும், தொற்று பரவலை பேரிடராக அறிவித்துள்ள நிலையில், தேர்தல் நடத்த தற்போது உகந்த நேரமல்ல என்றும் அரசியல் சாசனத்தின்படி, பொது சுகாதாரத்தை பேணுவது அரசின் கடமை என்பதால் நிலை சீராகும் வரை தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், தேர்தல் அறிவிப்பு வெளியிட தயாராக இருப்பதாகவும், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருப்பதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், அரசு நெறிமுறைகள் பின்பற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு தரப்பில், தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் நீதிமன்ற உத்தரவின்படி மாநில அரசு செயல்படும் என தெரிவிக்கப்பட்டது. விசாரணையின் போது குறுக்கிட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் நடத்தப் போவதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதால், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என தெரிவித்தனர்.அரசியல் சட்டத்தை பின்பற்ற தவறியதால் தான் உச்ச நீதிமன்றம் தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட தேதியில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்காவிட்டால் அது நீதிமன்ற அவமதிப்பு எனச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், உள்ளாட்சித் தேர்தலில் கொரோனா தடுப்பு விதிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என உத்தரவிடுவதாகவும், தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது எனவும் தெரிவித்தனர்.தேர்தலை அறிவித்தால் அது கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி நடத்தப்பட வேண்டும் எனவும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர். மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்த கொரோனா விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தி, வழக்குகளை முடித்து வைத்த நீதிபதிகள், தேர்தல் அறிவிப்புக்கு பின் இந்த வழக்குகளை விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சென்னை அரும்பாக்கம் அலுவலகத்தில் தேர்தல் அட்டவணையை ஆணையர் பழனிக்குமார் வெளியிட்டார். வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும் எனவும் பழனிக்குமார் தெரிவித்துள்ளார். மார்ச் 4ஆம் தேதி மேயர், நகர்மன்ற தலைவர்களை தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்புற உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுக கூட்டணி கட்சிகளும், அதிமுக கூட்டணி கட்சிகளும், தேமுதிக,நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சியினர் சந்திக்க தயாராகவே உள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஏற்கனவே வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
journalist

3வது நாளாக மழை வெள்ளத்தில் மக்களோடு மக்களாக நின்று நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வருகிறார் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியில் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வடிய வைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் நேற்று முன்தினம் இரவு முதல் இன்று அதிகாலை வரை இடைவிடாமல் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னை முழுவதும் வெள்ளக்காடானது.

தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வடிய வைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர்  தொடர்ந்து பார்வையிட்டு வருகிறார்.


பொன்னேரி தொகுதிக்குட்பட்ட பொன்னேரி பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதி, பழவேற்காடு பகுதி   இன்று பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர்  ஆய்வு மேற்கொண்டார் மேலும் மக்களுக்கு நிவாரண உதவிகளை  வழங்கினார்

இதையடுத்து மழை வெள்ளத்தை துரிதமாக வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்

Categories
journalist

பொன்னேரி வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டிட பணி

பொன்னேரியில் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடத்தில் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

கட்டிடம் சேதமடைந்து வருவதாலும், போதிய வசதிகள் இல்லாததாலும் புதிய வட்டாட்சியர் அலுவலகம் அமைக்க ஏற்கெனவே தமிழக அரசால் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பொன்னேரி அருகே வேண்பாக்கம் ஜெய்கோபால் கரோடியா அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகே புதிதாக பொன்னேரி வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது.

13 ஆயிரம் சதுர அடியில் சுமார் ரூ.3.07 கோடி மதிப்பில் அலுவலகம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.

அதற்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவுக்கு பொன்னேரி சட்ட மன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் அவர்கள் தலைமை வகித்தார்.

இப்பணியை, பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Categories
Uncategorized

புழல் ஏரியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆய்வு

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் எரிகளில் ஒன்றான புழல்ஏரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். 22 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தமிழக முதல்வராக ஸ்டாலின் ஏரியை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

தமிழகத்தில் பருவமழை தொடங்க உள்ளதால், ஏரி, குளம், கண்மாய்கள், கால்வாய்கள் தூரவாரப்பட்டு வருகிறது. மேலும், மழையின்போது, அணைகள் ஏரிகள், பொதுமக்கள் பாதிக்கப்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக சென்னையை சுற்றி உள்ள நீர்நிலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். அதன்படி, இன்று சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான புழல் செம்பரம்பாக்கம் போன்ற ஏரிகளை நேரில் சென்று ஆய்வு செய்கிறார்.

புழல் ஏரியில் 18.18 அடிக்கு நீா் உள்ளது. புழல் ஏரியில் நீர் இருப்பு 2,772 மி.கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் 2,789 மி.கன அடி நீர் உள்ளது.

இன்று காலை தலைமைச்செயலகத்தில் இருந்து புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின், முதலில் செங்குன்றம் அருகே உள்ள புழல் ஏரிக்கு சென்று ஆய்வு நடத்தினார்.  அணையின் உறுதித்தன்மை, நீர் இருப்பு  குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்ததுடன், எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் கேட்டார். நீர் இருப்பு, கரை பலப்படுத்துதல் மற்றும் மதகுகளின் உறுதி தன்மை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், நீர் வழிப்பாதையில் உள்ள ஆகாய தாமரை அகற்றவும் கரையை பலப்படுத்தவும் முதலமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

22 ஆண்டுகளுக்கு பின் புழல் ஏரியை  முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

ஆய்வின் போது அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் சந்தீப் இதில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் சங்கர் புழல் ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், புழல் ஒன்றிய பெருந்தலைவர் திருமதி. தங்கமணி திருமால், ஊராட்சி செயலாளர் திரு.ஸ்டாலின், சத்தியகுமார் ஸ்டாலின் புழல் ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் மற்றும் அரசு அதிகரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து செம்பரம்பாக்கம் நீர்தேக்கத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்கிறார்.

Categories
journalist

பழவேற்காட்டில் பாரம்பரிய மீன் உணவு விருந்து

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதி பழவேற்காடு பகுதி மகளிர் குழு & மீனவ மக்கள் இனைந்து நடத்திய கடல் சார்ந்த மீன்வகை உணவு விருந்தளிப்பு விழாவில் பொன்னேரி எம்.எல்.ஏ திரு. துரை சந்திரசேகர் அவர்கள் முன்னினையில்

திருவள்ளூர்  எம்.பி DR. K.ஜெயக்குமார் அவர்களும் மற்றும் தென் சென்னை எம்.பி திருமதி.Dr.தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பழவேற்காடு பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டனர்

Dangers of Outsourcing and Tips to Avoid Them

Nowadays, many businesses outsource their works to reduce costs and to find skilled labor. But the trick is finding the right person for the right job.

Top Outsourcing Issues and How to Avoid Them

Outsourcing, when done effectively, may help your company develop without sacrificing the time, energy, and money required to establish internal infrastructure. However, it has some cons like,

1. Insufficient proficiency with Outsourcing

It might be daunting when you first start working with someone or on anything. Best practices, common concepts, and processes are unfamiliar to you, and to transfer your goal to other people especially you don’t work with people before is a tough task.

How to overcome: Select the best vendor in the market. The expert vendor will guide you through the process, assisting you in avoiding bottlenecks and mitigating any hazards. They’ll assist you with

  • Defining specifications
  • Navigating the discovery process
  • Identifying the top candidates for the position

But, at the end of the day, it’s important to realize that outsourcing is a risk and you need to be ready to take that.

2. Absence of knowledge in hiring outsource

The issue with hiring outsourced workers is a lack of expertise. when you don’t have knowledge in IT technologies like JavaScript or react or Machine language and you will give the task to a thirty-party vendor, then you will not able to evaluate the results appropriately. Without having a good knowledge and understanding of technologies and solutions you are at risk of hiring the wrong person.

How to overcome: Develop your Knowledge

Setting explicit performance requirements for the project is the most crucial component of avoiding this problem. You could wish to hire someone in-house to set job criteria and keep a closer eye on the vendor’s work. If you can’t afford to hire another employee, choose a provider that is educated and trustworthy enough to assist you in understanding the workflow and outcome.

3. Failure of pricing estimation

Although we previously stated that outsourcing may save you a significant amount of money, it may also go wrong if not properly done. You can’t estimate the exact rate without knowing full details of what you want when you want that, and how much it will price. This leads us to one of the most difficult aspects of outsourcing: determining an accurate cost estimate.

How to overcome: Perfect estimation

Find an experienced organization or individual freelance employee to assist you to define the specific set of criteria for the job if you’re having problems doing so. To prevent surprise costs, ask as many questions as you can to figure out how the pricing strategy works. Explain your financial constraints to the vendor to avoid future misunderstandings.

4. Selecting the perfect vendor for our project

You can have trouble finding a provider that is the proper size, among other outsourcing issues. A tiny outsourced firm will leave you with little space for expansion because it will be difficult to scale up or down. A large outsourcing agency may take a less personalized approach and overcharge you for your assignment.

How to overcome: Find the professional vendor

Took another look and objectively check out your company i.e. company size, company employee strength, company growth, company revenue, etc In case if you’re a newly started or startup company don’t prefer the big outsourcing organization. In the meanwhile, don’t prefer the lowest vendor also because it won’t help you to achieve the results

5. Failure Team management and communication

Team management and communication always take you to success. You have a piece of good knowledge of your planned and ideas but the vendor a person came from varying backgrounds, ideas, experience, education, and also they have some own judgment Here are our vendor employment alternatives if you don’t want to be misunderstood and believe that good communication can smooth out any rough edges.

How to overcome: Stable communication and Management

Integrate calls, feedback loops, and other communication tactics into your project plan to ensure that communication is a key component of the process. If feasible, go to each other’s offices to conduct in-person encounters that will help you understand each other better and build your empathy. Finally, to stay in sync, use project management systems like JIRA and Trello, as well as a shared GitHub board to exchange technical processes.

Final Thoughts

You can avoid outsourcing-related problems by continuous checking of the documentation and project, setting up direct communication channels, etc. Apart from that, you can research the vendor details before deciding on it. You should know the risks and also look for a trustable vendor.

Design a site like this with WordPress.com
Get started