Categories
Uncategorized

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: பிப்ரவரி 19ல் வாக்குப்பதிவு, 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சென்னை அரும்பாக்கம் அலுவலகத்தில் தேர்தல் அட்டவணையை ஆணையர் பழனிக்குமார் வெளியிட்டார். வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும் எனவும் பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பொதுத் தேர்தல்களை நடத்தும் பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக இறங்கியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொரோனா பாதுகாப்பு விதிகளை கடைபிடிப்பது குறித்து மாநில தேர்தல் ஆணையம் கடந்த டிசம்பர் மாதம் சுற்றறிக்கை வெளியிட்டது.

இதனை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பெண்கள் மற்றும் பட்டியலினத்தவர்களுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தேர்தலை சந்திக்கும் வகையில் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களை சுமூகமாக நடத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் கடந்த புதன்கிழமை ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். மேலும் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

தேர்தலின் போது வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க செல்வர் என்பதால், வேட்பாளர்கள் மட்டுமல்ல வாக்களிப்பவர்களும், வாக்களிக்காதவர்களும் பாதிக்கப்படுவர் என்றும், தொற்று பரவலை பேரிடராக அறிவித்துள்ள நிலையில், தேர்தல் நடத்த தற்போது உகந்த நேரமல்ல என்றும் அரசியல் சாசனத்தின்படி, பொது சுகாதாரத்தை பேணுவது அரசின் கடமை என்பதால் நிலை சீராகும் வரை தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், தேர்தல் அறிவிப்பு வெளியிட தயாராக இருப்பதாகவும், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருப்பதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், அரசு நெறிமுறைகள் பின்பற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு தரப்பில், தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் நீதிமன்ற உத்தரவின்படி மாநில அரசு செயல்படும் என தெரிவிக்கப்பட்டது. விசாரணையின் போது குறுக்கிட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் நடத்தப் போவதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதால், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என தெரிவித்தனர்.அரசியல் சட்டத்தை பின்பற்ற தவறியதால் தான் உச்ச நீதிமன்றம் தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட தேதியில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்காவிட்டால் அது நீதிமன்ற அவமதிப்பு எனச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், உள்ளாட்சித் தேர்தலில் கொரோனா தடுப்பு விதிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என உத்தரவிடுவதாகவும், தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது எனவும் தெரிவித்தனர்.தேர்தலை அறிவித்தால் அது கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி நடத்தப்பட வேண்டும் எனவும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர். மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்த கொரோனா விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தி, வழக்குகளை முடித்து வைத்த நீதிபதிகள், தேர்தல் அறிவிப்புக்கு பின் இந்த வழக்குகளை விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சென்னை அரும்பாக்கம் அலுவலகத்தில் தேர்தல் அட்டவணையை ஆணையர் பழனிக்குமார் வெளியிட்டார். வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும் எனவும் பழனிக்குமார் தெரிவித்துள்ளார். மார்ச் 4ஆம் தேதி மேயர், நகர்மன்ற தலைவர்களை தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்புற உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுக கூட்டணி கட்சிகளும், அதிமுக கூட்டணி கட்சிகளும், தேமுதிக,நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சியினர் சந்திக்க தயாராகவே உள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஏற்கனவே வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
journalist

பொன்னேரி வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டிட பணி

பொன்னேரியில் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடத்தில் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

கட்டிடம் சேதமடைந்து வருவதாலும், போதிய வசதிகள் இல்லாததாலும் புதிய வட்டாட்சியர் அலுவலகம் அமைக்க ஏற்கெனவே தமிழக அரசால் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பொன்னேரி அருகே வேண்பாக்கம் ஜெய்கோபால் கரோடியா அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகே புதிதாக பொன்னேரி வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது.

13 ஆயிரம் சதுர அடியில் சுமார் ரூ.3.07 கோடி மதிப்பில் அலுவலகம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.

அதற்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவுக்கு பொன்னேரி சட்ட மன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் அவர்கள் தலைமை வகித்தார்.

இப்பணியை, பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Categories
Uncategorized

புழல் ஏரியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆய்வு

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் எரிகளில் ஒன்றான புழல்ஏரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். 22 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தமிழக முதல்வராக ஸ்டாலின் ஏரியை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

தமிழகத்தில் பருவமழை தொடங்க உள்ளதால், ஏரி, குளம், கண்மாய்கள், கால்வாய்கள் தூரவாரப்பட்டு வருகிறது. மேலும், மழையின்போது, அணைகள் ஏரிகள், பொதுமக்கள் பாதிக்கப்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக சென்னையை சுற்றி உள்ள நீர்நிலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். அதன்படி, இன்று சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான புழல் செம்பரம்பாக்கம் போன்ற ஏரிகளை நேரில் சென்று ஆய்வு செய்கிறார்.

புழல் ஏரியில் 18.18 அடிக்கு நீா் உள்ளது. புழல் ஏரியில் நீர் இருப்பு 2,772 மி.கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் 2,789 மி.கன அடி நீர் உள்ளது.

இன்று காலை தலைமைச்செயலகத்தில் இருந்து புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின், முதலில் செங்குன்றம் அருகே உள்ள புழல் ஏரிக்கு சென்று ஆய்வு நடத்தினார்.  அணையின் உறுதித்தன்மை, நீர் இருப்பு  குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்ததுடன், எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் கேட்டார். நீர் இருப்பு, கரை பலப்படுத்துதல் மற்றும் மதகுகளின் உறுதி தன்மை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், நீர் வழிப்பாதையில் உள்ள ஆகாய தாமரை அகற்றவும் கரையை பலப்படுத்தவும் முதலமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

22 ஆண்டுகளுக்கு பின் புழல் ஏரியை  முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

ஆய்வின் போது அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் சந்தீப் இதில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் சங்கர் புழல் ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், புழல் ஒன்றிய பெருந்தலைவர் திருமதி. தங்கமணி திருமால், ஊராட்சி செயலாளர் திரு.ஸ்டாலின், சத்தியகுமார் ஸ்டாலின் புழல் ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் மற்றும் அரசு அதிகரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து செம்பரம்பாக்கம் நீர்தேக்கத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்கிறார்.

Categories
journalist

பழவேற்காட்டில் பாரம்பரிய மீன் உணவு விருந்து

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதி பழவேற்காடு பகுதி மகளிர் குழு & மீனவ மக்கள் இனைந்து நடத்திய கடல் சார்ந்த மீன்வகை உணவு விருந்தளிப்பு விழாவில் பொன்னேரி எம்.எல்.ஏ திரு. துரை சந்திரசேகர் அவர்கள் முன்னினையில்

திருவள்ளூர்  எம்.பி DR. K.ஜெயக்குமார் அவர்களும் மற்றும் தென் சென்னை எம்.பி திருமதி.Dr.தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பழவேற்காடு பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டனர்

Categories
journalist

திமுக அபார வெற்றி

சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 1015 ஒன்றிய கவுன்சிலர் இடங்களை திமுக அணியும் 201 இடங்களை அதிமுக அணியும் பெற்றுள்ளன. மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் திமுக கூட்டணி 138 இடங்களையும் அதிமுக அணி 2 இடங்களையும் பெற்றுள்ளன.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாடியநல்லூர் ஊராட்சி 18வது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட மாலதி மகேந்திரன் 1894 வாக்குகள் பெற்று 911 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
நல்லூர் ஊராட்சியில் 15வது ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட திருமதி. ருக்மணி ரவிச்சந்திரன் உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில்
பெற்றார்.

Categories
Uncategorized

மீஞ்சூரில் மாபெரும் மருத்துவ முகாம்

இன்று பொன்னேரி சட்டமன்ற தொகுதி உட்பட்ட மீஞ்சூர் பேரூராட்சியில் மாபெரும் மருத்துவ முகாம் மாண்புமிகு பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் திரு.துரை சந்திரசேகர் MA.BL., MLA அவர்கள் துவக்கி வைத்தார்

இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் தலைமை மருத்துவர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Categories
journalist

இன்று தேர்தல் முடிவு

தமிழ்நாட்டில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.

ஆனால் அந்த நேரத்தில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை.

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9-ந்தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இரண்டு இடங்களில் இன்று (09/10/2021) இடைத்தேர்தல் நடைபெற்றது. 

நல்லூர் ஊராட்சியில் 15வது ஒன்றியக் கவுன்சிலருக்கும், பாடியநல்லூர் ஊராட்சியில் 5 வார்டுகள் உள்ளடங்கிய 18வது ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கும் இன்று இடைத் தேர்தல் நடைபெற்றது வாக்காளர்கள் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.


இந்த 9 மாவட்டங்களில் நடந்து முடிந்த, ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கையானது, இன்று காலை 8:00 மணிக்கு துவங்குகிறது.

Design a site like this with WordPress.com
Get started