Categories
Uncategorized

மீஞ்சூரில் மாபெரும் மருத்துவ முகாம்

இன்று பொன்னேரி சட்டமன்ற தொகுதி உட்பட்ட மீஞ்சூர் பேரூராட்சியில் மாபெரும் மருத்துவ முகாம் மாண்புமிகு பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் திரு.துரை சந்திரசேகர் MA.BL., MLA அவர்கள் துவக்கி வைத்தார்

இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் தலைமை மருத்துவர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Categories
journalist

இன்று தேர்தல் முடிவு

தமிழ்நாட்டில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.

ஆனால் அந்த நேரத்தில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை.

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9-ந்தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இரண்டு இடங்களில் இன்று (09/10/2021) இடைத்தேர்தல் நடைபெற்றது. 

நல்லூர் ஊராட்சியில் 15வது ஒன்றியக் கவுன்சிலருக்கும், பாடியநல்லூர் ஊராட்சியில் 5 வார்டுகள் உள்ளடங்கிய 18வது ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கும் இன்று இடைத் தேர்தல் நடைபெற்றது வாக்காளர்கள் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.


இந்த 9 மாவட்டங்களில் நடந்து முடிந்த, ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கையானது, இன்று காலை 8:00 மணிக்கு துவங்குகிறது.

Design a site like this with WordPress.com
Get started