Categories
journalist Uncategorized

திருவள்ளூரில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் பிரியங்கா காந்தி கைதை கண்டித்து

08-10-2021 அன்று ,திருவள்ளூர் காங்கிரஸ் கமிட்டி சார்பாக
மாபெரும் கண்டன பொதுக்கூட்டம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகாமையில் நடைபெற்றது 

இந்தியாவின் அன்பு மகள் “திருமதி.பிரியங்கா காந்தி” அவர்களை பாஜகவின் காட்டுமிராண்டி அரசு அயோக்கியத்தனமாக, அத்துமீறி கைது செய்ததை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர், டாக்டர்.K.ஜெயக்குமார் எம்.பி., அவர்கள் மற்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி, மாநில செயலாளர்    திரு. துரைசந்திரசேகர் MA.,B.L., MLA., அவர்கள்  கண்டன உரையாற்றினார்.

இக்கூட்டத்தில்,
திரு.T.L.சதாசிவலிங்கம், MA.B.L.,மாநில து.தலைவர்
திரு.D.ரமேஷ் திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்
மற்றும் திரு.A.G.சிதம்பரம் MA.B.L., திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆகியோர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Categories
journalist Uncategorized

பொன்னேரி மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார்

செப்டம்பர் மாதம் 03 அன்று பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் MA. BL, MLA அவர்களின் முயற்சியில் உங்கள் தொகுதியின் முதல்வர்  திட்டத்தின் கீழ் பொன்னேரி வட்டம் சோழவரம் ஒன்றியத்தில் அமைந்துள்ள அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இதில் சோழவரம் ஒன்றிய பெருந்தலைவர் அவர்கள் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் பொன்னேரி வட்டாச்சியார் அவர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர் அவர்கள் கலந்து கொண்டனர்.

Design a site like this with WordPress.com
Get started