Categories
journalist

முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (ஜன.27) காணொலி வாயிலாக நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் கலந்துக் கொள்ள அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, திமுகவின்  முக்கிய நிர்வாகிகள் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு இன்று  மாலை வெளியானது. அதன்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 22-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நாளை திமுக சார்பில் மாவட்டச் செயலாளர் கூட்டம் கொரோனா பரவல் காரணமாக  காணொலி மூலம் நடைபெற உள்ளது.

Categories
journalist Uncategorized

நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களுக்கு.. நேரில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் துரை சந்திரசேகர் பொன்னேரி MLA

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் அதிகமான மழை பொழிந்துள்ளது

அதன்படி திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் நரிக்குறவர்கள் வசித்து வரும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர்  அவர்கள்
மீஞ்சூர் அருகில் உள்ள  குன்னம்மஞ்சேரியில்  கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவர்கள் மற்றும் இருளர் சமூக மக்களுக்கு  நலத்திட்ட உதவிகளை நேரில் சென்று வழங்கினார்.

Categories
journalist

3வது நாளாக மழை வெள்ளத்தில் மக்களோடு மக்களாக நின்று நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வருகிறார் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியில் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வடிய வைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் நேற்று முன்தினம் இரவு முதல் இன்று அதிகாலை வரை இடைவிடாமல் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னை முழுவதும் வெள்ளக்காடானது.

தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வடிய வைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர்  தொடர்ந்து பார்வையிட்டு வருகிறார்.


பொன்னேரி தொகுதிக்குட்பட்ட பொன்னேரி பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதி, பழவேற்காடு பகுதி   இன்று பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர்  ஆய்வு மேற்கொண்டார் மேலும் மக்களுக்கு நிவாரண உதவிகளை  வழங்கினார்

இதையடுத்து மழை வெள்ளத்தை துரிதமாக வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்

Categories
journalist

சென்னை புழல் ஏரி முழு கொள்ளளவை நெருங்கியதால் நீர் திறப்பு – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

புழல் ஏரி தனது முழு கொள்ளளவை நெருங்கியதால் உபரி நீர் திறக்கப்படவுள்ளது.

சென்னை அடுத்த புழல் ஏரியில் இருந்து காலை 11 மணிக்கு உபரி நீர் திறக்கவுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கனமழையின் காரணமாக புழல் ஏரி தனது முழு கொள்ளளவை நெருங்கியதால் ஏரியின் பாதுகாப்பை கருதி வினாடிக்கு 500 கன அடி வீதம் இன்று காலை 11 மணி அளவில் பொதுப்பணித்துறையினர் திறந்துவிட உள்ளனர். சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளுள் பிரதானமானது புழல் ஏரி .ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் வினாடிக்கு ஆயிரத்து 487 கன அடி நீர்வரத்து ஏரிக்கு வர பெற்று வேகமாக நிரம்பி வருகிறது மொத்த கொள்ளளவு 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடியில் தற்போது 2872 மில்லியன் கன அடி கொள்ளளவு நீர் இருப்பு உள்ளது .

புழல்ஏரியின் மொத்த உயரம் 21.20 அடி. ஏரியின் தற்போது நீர்மட்டம் 19.30 அடியை எட்டி நிரம்பி உள்ளது. இதனால் ஏரியின் பாதுகாப்பை கருதி இன்று 11 மணி அளவில் வினாடிக்கு 500 கன அடி வீதம் மதகுகளில் உபரி நீர் வெளியேற்றப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறையினர் செய்துள்ளனர். உபரி நீர் வெளியேறும் பகுதிகளான காவாங்கரை பாயசம்பாக்கம் சாமியார் மடம் முல்லை வாயில் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வருவாய்த்துறையினர் சமுதாய கூடங்களையும் தனியார் மண்டபங்களையும் தயார் நிலையில் வைத்துள்ளனர்

Categories
journalist

வன்னியர்களுக்கு 10.5% அரசாணை ரத்து

மதுரை: வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது.

சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எம்பிசி பிரிவினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அமலில் இருந்துள்ளது.

அரசாணை

இந்நிலையில் எம்பிசி பிரிவில் இருந்த வன்னியர் சமூகத்திற்கு மட்டும் 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது இந்த சட்டம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி, கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், திமுக அரசு பதவிக்கு வந்த பிறகு இது அரசாணையிலும் வெளியிடப்பட்டது.

நீதிபதிகள் அதிரடி

மேலும், வன்னியர் ஜாதியினருக்கு மட்டும் 10.5 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனவும், வன்னியகுல சத்திரியர் பிரிவில் ஏழு சாதியினர் உள்ளதாகவும், வன்னியர் இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும் வாதிடப்பட்டது. இந்த வழக்குளில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் துரைசாமி மற்றும் முரளி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா, மாநில அரசுக்கு இட ஒதுக்கீடு வழங்க அதிகாரம் உள்ளதா, உள்ளிட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறி, வன்னியர்களுக்கு10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கிய சட்டத்தை ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

Categories
journalist

பொன்னேரி வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டிட பணி

பொன்னேரியில் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடத்தில் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

கட்டிடம் சேதமடைந்து வருவதாலும், போதிய வசதிகள் இல்லாததாலும் புதிய வட்டாட்சியர் அலுவலகம் அமைக்க ஏற்கெனவே தமிழக அரசால் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பொன்னேரி அருகே வேண்பாக்கம் ஜெய்கோபால் கரோடியா அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகே புதிதாக பொன்னேரி வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது.

13 ஆயிரம் சதுர அடியில் சுமார் ரூ.3.07 கோடி மதிப்பில் அலுவலகம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.

அதற்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவுக்கு பொன்னேரி சட்ட மன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் அவர்கள் தலைமை வகித்தார்.

இப்பணியை, பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Categories
journalist

காங்கிரஸ் கட்சி மீண்டும் வலுப்பெற்று வருகிறது: பாஜகவினர் தங்களைப் பார்த்து அஞ்சுகிறார்கள்: செயல் வீரர் கூட்டத்தில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் பேச்சு

வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் அதிகபடியான இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியின் கௌரவத்தை பாதுகாப்போம் மகாத்மா காந்தியின் 152-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொன்னேரி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற செயல் வீரர் கூட்டத்தில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் பேச்சு.

தேசம் முழுவதிலும் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாள் விழாவை வெகு விமர்சையாக கொண்டாடி வரும் நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்றத் தொகுதியில் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 152- வது பிறந்தநாளை முன்னிட்டு தனியார் திருமண மண்டபத்தில் பொன்னேரி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நிர்வாகிகள் அறிமுகம் செய்யும் கூட்டம் மற்றும் செயல்வீரர் கூட்டம் பொன்னேரி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது

நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் சதாசிவ லிங்கம் திருவள்ளூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் வலுப்பெற்று வருகிறது எனவும் உங்களுடன் பாஜகவினர் போட்டி போட்டுக் கொண்டு சில நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்து நடத்தி வருகின்றனர் எனவும் பாஜகவினர் தங்களைப் பார்த்து அஞ்சுகிறார்கள் என தெரிவித்தார்.

பின்னர் பேசிய பொன்னேரி (காங்கிரஸ்) சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் பொன்னேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியினருக்கு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு எதிர் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறாது என ஏளனம் செய்தனர், ஆனால் நான் வெற்றி பெற்று இப்பொழுது மக்களுக்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்து சேர்த்துக் கொண்டிருக்கிறேன் வரும் காலங்களில் காங்கிரஸ் கட்சி திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் வலுவான கட்சியாக உருவெடுக்கும் என தெரிவித்த அவர் வருகின்ற தேர்தலில் பெருவாரியான இடத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பெண்களாக இருக்கக்கூடும் எனவும் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியின் கௌரவத்தை பாதுகாப்போம் என அவர் தெரிவித்தார்

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் சதாசிவ லிங்கம், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், மற்றும் பொன்னேரி நகர நிர்வாகிகள் மாவட்ட பொறுப்பாளர்கள் நகர பொறுப்பாளர்கள் மாவட்ட துணைத்தலைவர்கள் மாவட்ட பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Categories
journalist

பழவேற்காட்டில் பாரம்பரிய மீன் உணவு விருந்து

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதி பழவேற்காடு பகுதி மகளிர் குழு & மீனவ மக்கள் இனைந்து நடத்திய கடல் சார்ந்த மீன்வகை உணவு விருந்தளிப்பு விழாவில் பொன்னேரி எம்.எல்.ஏ திரு. துரை சந்திரசேகர் அவர்கள் முன்னினையில்

திருவள்ளூர்  எம்.பி DR. K.ஜெயக்குமார் அவர்களும் மற்றும் தென் சென்னை எம்.பி திருமதி.Dr.தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பழவேற்காடு பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டனர்

Categories
journalist

திமுக அபார வெற்றி

சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 1015 ஒன்றிய கவுன்சிலர் இடங்களை திமுக அணியும் 201 இடங்களை அதிமுக அணியும் பெற்றுள்ளன. மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் திமுக கூட்டணி 138 இடங்களையும் அதிமுக அணி 2 இடங்களையும் பெற்றுள்ளன.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாடியநல்லூர் ஊராட்சி 18வது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட மாலதி மகேந்திரன் 1894 வாக்குகள் பெற்று 911 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
நல்லூர் ஊராட்சியில் 15வது ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட திருமதி. ருக்மணி ரவிச்சந்திரன் உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில்
பெற்றார்.

Categories
journalist

இன்று தேர்தல் முடிவு

தமிழ்நாட்டில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.

ஆனால் அந்த நேரத்தில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை.

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9-ந்தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இரண்டு இடங்களில் இன்று (09/10/2021) இடைத்தேர்தல் நடைபெற்றது. 

நல்லூர் ஊராட்சியில் 15வது ஒன்றியக் கவுன்சிலருக்கும், பாடியநல்லூர் ஊராட்சியில் 5 வார்டுகள் உள்ளடங்கிய 18வது ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கும் இன்று இடைத் தேர்தல் நடைபெற்றது வாக்காளர்கள் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.


இந்த 9 மாவட்டங்களில் நடந்து முடிந்த, ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கையானது, இன்று காலை 8:00 மணிக்கு துவங்குகிறது.

Design a site like this with WordPress.com
Get started