
வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் அதிகபடியான இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியின் கௌரவத்தை பாதுகாப்போம் மகாத்மா காந்தியின் 152-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொன்னேரி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற செயல் வீரர் கூட்டத்தில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் பேச்சு.
தேசம் முழுவதிலும் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாள் விழாவை வெகு விமர்சையாக கொண்டாடி வரும் நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்றத் தொகுதியில் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 152- வது பிறந்தநாளை முன்னிட்டு தனியார் திருமண மண்டபத்தில் பொன்னேரி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நிர்வாகிகள் அறிமுகம் செய்யும் கூட்டம் மற்றும் செயல்வீரர் கூட்டம் பொன்னேரி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது

நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் சதாசிவ லிங்கம் திருவள்ளூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் வலுப்பெற்று வருகிறது எனவும் உங்களுடன் பாஜகவினர் போட்டி போட்டுக் கொண்டு சில நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்து நடத்தி வருகின்றனர் எனவும் பாஜகவினர் தங்களைப் பார்த்து அஞ்சுகிறார்கள் என தெரிவித்தார்.
பின்னர் பேசிய பொன்னேரி (காங்கிரஸ்) சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் பொன்னேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியினருக்கு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு எதிர் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறாது என ஏளனம் செய்தனர், ஆனால் நான் வெற்றி பெற்று இப்பொழுது மக்களுக்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்து சேர்த்துக் கொண்டிருக்கிறேன் வரும் காலங்களில் காங்கிரஸ் கட்சி திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் வலுவான கட்சியாக உருவெடுக்கும் என தெரிவித்த அவர் வருகின்ற தேர்தலில் பெருவாரியான இடத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பெண்களாக இருக்கக்கூடும் எனவும் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியின் கௌரவத்தை பாதுகாப்போம் என அவர் தெரிவித்தார்

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் சதாசிவ லிங்கம், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், மற்றும் பொன்னேரி நகர நிர்வாகிகள் மாவட்ட பொறுப்பாளர்கள் நகர பொறுப்பாளர்கள் மாவட்ட துணைத்தலைவர்கள் மாவட்ட பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.