சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 1015 ஒன்றிய கவுன்சிலர் இடங்களை திமுக அணியும் 201 இடங்களை அதிமுக அணியும் பெற்றுள்ளன. மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் திமுக கூட்டணி 138 இடங்களையும் அதிமுக அணி 2 இடங்களையும் பெற்றுள்ளன.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாடியநல்லூர் ஊராட்சி 18வது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட மாலதி மகேந்திரன் 1894 வாக்குகள் பெற்று 911 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
நல்லூர் ஊராட்சியில் 15வது ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட திருமதி. ருக்மணி ரவிச்சந்திரன் உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில்
பெற்றார்.
